வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா, தவித்து போகும் இனியா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
பாக்கியலட்சுமி சீரியலில், அமைதியான குடும்ப பெண்ணாக இருந்து வந்த பாக்யா, தற்போது எரிமலையை போல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளார். மேலும் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளனர்.
அதிரடி முடிவு:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சதி திட்டங்களை தீட்டி தன் உண்மை முகத்தை மறைத்து மொத்த குடும்பத்தியும் முட்டாள் ஆக்கி வைத்திருந்தார் கோபி . இருப்பினும் தற்போது கோபியை பற்றி முழு உண்மையும் பாக்யாவுக்கு தெரிந்துவிட்டதால் சீரியலில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோபியை ராதிகாவும், பாக்கியாவும் பார்க்க வருகிறார்கள். அப்போது ராதிகாவின் கையைப்பிடித்து கோபி பேசுவதை பாக்கியா பார்த்துவிடுகிறார் . ஆனாலும் அப்போது ராதிகா தான் அந்த பொண்ணு என்று பாக்யாவுக்கு தெரியவில்லை.
Exams Daily Mobile App Download
பின்பு நர்ஸ் கோபியின் மனைவி யார் என்று கேட்கும் போது ராதிகா வந்துவிட்டார். அதைக்கண்டு பாக்கியா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டுக்கு வந்த பாக்கியா, கோபியிடம் உண்மையை கேட்கிறார். எப்போதும் போல் சமாளிக்க நினைக்கும் கோபியின் சுயரூபத்தை அனைவரிடம் சொல்கிறார். இருப்பினும் கோபியின் அப்பாவும், எழிலும் கோபி பற்றி உறுதிப்படுத்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைக்கின்றனர். அப்போது போஸ்ட் மேன் வருகிறார், கோபிக்கு ஒரு போஸ்ட் வந்திருக்கு என்று கூறுகின்றார்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? அமைச்சர் விளக்கம்!
அந்த போஸ்ட், கோபி பாக்கியா விவாகரத்து சம்பப்பட்ட போஸ்ட். இதை பார்த்து கோபியின் அம்மா கோபியை கன்னத்தில் அறைகிறார். மேலும் கோபியின் இந்த செயலால் மன விரக்தி அடையும் பாக்யா உச்சக்கட்ட கோபமடைகிறார். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாக்யா. இதைக்கண்டு இனியா தவித்துப் போய் அம்மா அம்மா என்று கதறுகிறார். மேலும் எழிலும் செல்வியும் பாக்கியாவை போக வேண்டாம் போக வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே ரோட்டில் ஓடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது. பாக்கியாவின் இந்த அதிரடி முடிவால் பாக்யலட்சுமி சீரியல் உச்சக்கட்ட பரபரப்புடன் தற்போது சென்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.