கோபி & ராதிகா உறவு பற்றி அறிந்துகொள்ளும் பாக்கியா, ராதிகாவை மிரட்டும் எழில் – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு கோபி உடன் தொடர்பில் இருப்பது ராதிகா தான் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் இது பற்றி எழிலிடம் பாக்கியா சொல்ல ராதிகாவை எழில் எச்சரிக்கை செய்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பாக்கியாவும் ராதிகாவும் கோபியை பார்க்க வருகின்றனர். அப்போது ராதிகா கோபியின் மனைவி என சொல்லி எல்லா வேலைகளையும் செய்கிறார். கோபியின் இந்த நிலைமையை பார்த்து ராதிகாவுக்கு மனம் மாறுகிறது. இந்நிலையில் நர்ஸ் கோபியின் மனைவி பில் கட்டியதாக பாக்கியாவிடம் சொல்ல யாரை சொல்கிறார் என தெரியாமல் பாக்கியா ரூமிற்கு சென்று பார்க்கிறார்.
Exams Daily Mobile App Download
அங்கே கோபி வேறு பெண் கையை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க அதை பார்த்து பாக்கியாவிற்கு மனம் உடைந்து போகிறது. அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் பாக்கியா மயக்கம் போட்டு விழுகிறார். இந்நிலையில் நர்ஸ் மீண்டும் கோபியின் மனைவி யார் என கேட்க உடனே ராதிகா எழுந்து செல்கிறார். அதனால் கோபி உடன் உறவு வைத்திருப்பது ராதிகா தான் என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.
UGC NET தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!
மறுபக்கம் வீட்டில் அனைவரும் கோபி வருவார் என காத்திருக்க ஆனால் கோபி வரவில்லை. இந்நிலையில் பாக்கியா ராதிகாவை பார்த்த அதிர்ச்சியில் வீட்டிற்கு செல்கிறார். அங்கே எழிலிடம் நடந்ததை பற்றி சொல்ல உடனே கோபப்படும் எழில் ராதிகாவை தேடி செல்கிறார். இனிமேல் என் அப்பாவை தொல்லை செய்ய கூடாது என் அம்மா மிகவும் பாவம் என சொல்லி ராதிகாவை மிரட்டுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்