கோபிக்கே சவால் விடும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபி இத்தனை நாட்கள் பிடிக்காமல் தான் கூடவே இருந்தார் என்பதை பாக்கியா அறிந்ததுமே கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். தற்போது கோபிக்கே, பாக்கியா சவால்விடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் நாளுக்கு நாள் பாக்கியாவின் தைரியம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இத்தனை நாட்கள் கோபியை நம்பி தான் பாக்கியா வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்தார். அதாவது, என்ன தான் பாக்கியா தனியாக தொழில் செய்தாலும் கூட முழுக்க முழுக்க கோபியை நினைத்து தான் வாழ்ந்து வந்தார். ஆனால், தற்போது கோபி பாக்கியாவை ஏமாற்றிய விஷயம் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது.
Exams Daily Mobile App Download
எப்படியும் பாக்கியா கோபியுடன் தான் சேர்ந்து வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் பிடிக்காதவருடன் ஒரு நிமிடம் கூட சேர்ந்து வாழ கூடாது என நினைத்து கோபியை விட்டு விலக நினைத்தார். மேலும், கோபி விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் கோபிக்கு கண்டிப்பாக விவாகரத்து கொடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். குடும்பத்தினர்கள் அனைவரும் விவாகரத்து செய்ய வேண்டாம் என பாக்கியாவை தடுத்தும் கூட கோபியை பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டார்.
என்னோட முழு ஆதரவும் பாக்கியாவிற்கு தான் – உண்மையை போட்டு உடைத்த கோபி!
என்ன தான் கோபி பாக்கியாவை விட்டு விலக நினைத்தாலும் பாக்கியாவே கோபியை விவாகரத்து செய்ததை கோபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை உனக்கு இத்தனை நாட்கள் பிடிக்கவில்லை. இல்லையெனில் நான் கேட்டதும் இப்படி ஓடி வந்து விவாகரத்து கொடுத்திருக்க மாட்டாய் என பாக்கியாவுடன் கோபி சண்டை போடுகிறார். ஆனாலும், பாக்கியா கொஞ்சம் கூட கோவம் கொள்ளாமல் தைரியமாக இருக்கிறார். இதற்கு பிறகு தான் இல்லத்தரசியான பாக்கியாவின் உண்மையான தைரியத்தை பார்க்க இருக்கிறோம்.
Pl full details of TNPSC
1,2,4,5,6,7…and, RRB, Bank exam in coming year 2023,