தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைத்த பாக்கியா, மாட்டிக் கொள்ள போகும் கோபி – “மகா சங்கமம்” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியல் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வர பாக்கியா கோபி பேச்சை கேட்காமல் ராதிகாவை அழைக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மகா சங்கமம் ப்ரோமோ:
நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் மகா சங்கமம் சீரியலில், தாத்தாவின் 75வது பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாட வேண்டும் என ஈஸ்வரி நினைக்கிறார். அதனால் தாத்தாவின் சொந்தங்களை அழைக்க முடிவு செய்கின்றனர். அதன் படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர். ஆனால் அது கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது. மேலும் கோபிக்கு ராதிகாவிடம் பேச நேரம் இல்லாமல் இருக்கிறது.
இயற்கையாகவே கருவுறும் முல்லை – மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்! ப்ரோமோ ரிலீஸ்!
இந்த சூழ்நிலையில் கோபி, ராதிகாவை விழாவிற்கு அழைக்க கூடாது என எச்சரிக்கை செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அதை மீறி தனத்துடன் சென்று பாக்கியா ராதிகாவை அழைக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு சென்று கண்டிப்பாக தாத்தாவின் பிறந்தநாளுக்கு வர வேண்டும் என சொல்கிறார். மேலும் மயூரா மற்றும் நீங்க கட்டிக்க போறவரை கண்டிப்பாக கூட்டிக் கொண்டு வர வேண்டும் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
பின் கோபியிடம் பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு நம்மை அழைத்திருப்பதாக சொல்ல, ஆனால் கோபி எனக்கு அது போல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பழக்கம் இல்லை என சொல்கிறார். அப்போது ராதிகா நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்தால் நான் உங்களிடம் பேசவே மாட்டேன் என கோவமாக சொல்கிறார். கோபி அதை நினைத்து கோவப்பட நேராக பாக்கியாவிடம் வந்து நான் ராதிகாவை கூப்பிட வேண்டாம் என சொன்னேன் ஆனால் என் பேச்சை மீறி நீ ஏன் கூப்பிட்டாய் என சத்தம் போடுகிறார். அதை பார்த்து மூர்த்தி கோபிக்கு சமாதானம் செய்கிறார். அப்போது செல்வி சார் வர வர சரி இல்லை அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என நினைக்கிறன் என தனத்திடம சொல்ல அவர் பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகிறார்.