குடிபோதையில் கோபி உளறியதைக் கேட்டு ராதிகாவிடம் சண்டைபோடும் பாக்கியா – புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!

0
குடிபோதையில் கோபி உளறியதைக் கேட்டு ராதிகாவிடம் சண்டைபோடும் பாக்கியா - புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!
குடிபோதையில் கோபி உளறியதைக் கேட்டு ராதிகாவிடம் சண்டைபோடும் பாக்கியா - புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!
குடிபோதையில் கோபி உளறியதைக் கேட்டு ராதிகாவிடம் சண்டைபோடும் பாக்கியா – புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!

குடிபோதையில் என்ன செய்வதென்று தெரியாமல் கோபி, ராதிகா மற்றும் பாக்கியா இருவரிடமும் உண்மையை உளறிக் கொட்டுகிறார். இதன்பின்பு உடனடியாக கிளம்பி ராதிகாவின் வீட்டிற்கு வந்து பாக்கியா ராதிகாவை கண்டபடி திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கும் பாக்கியாவிற்க்கும் தெரிந்து விட்டது. இதற்கு மேலும் கோபி பொய் சொல்லி யாரையும் முட்டாளாக்க முடியாது. கோபியை பற்றிய உண்மையை மூர்த்தி தெரிந்து கொண்டு ராதிகாவிடம் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை பாருங்கள் என கூறிவிட்டு செல்கிறார். மூர்த்தி கூறியதை கேட்டதும் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது.

Exams Daily Mobile App Download

கோபி எப்போது ராதிகா வீட்டிற்கு வந்தாலும் உங்களது வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் என கேட்டு அடம்பிடிக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி நன்றாக குடித்துவிட்டு கோபி குடிபோதையில் வீட்டிற்கு வருகிறார். அப்போதும்கூட ராதிகா கோபியிடம் உங்களது வீட்டிற்கு என்னை கூட்டிச் செல்லுங்கள் என கேட்டு சண்டை போடுகிறார். இதனால் கடுப்பான கோபி, பாக்கியாவும், கோபியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் நீட்டுகிறார். பாக்கியா டீச்சர் தான் எனது மனைவி எனக் கூறுகிறார். இத்தனை நாட்களாக உங்களை நம்பி தான் இருந்தேன். ஆனால் நீங்களும் கடைசியில் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கூறி ராதிகா அழுகிறார்.

மீனா அப்பாவிடம் சண்டை போடும் முல்லை, குடும்பத்தில் வரும் அடுத்த சிக்கல் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

பின்பு குடிபோதையில் பாக்கியா வீட்டிற்கும் சென்று அங்கும் போதையில் அனைத்தையும் உளறிக் கொட்டுகிறார். போதை தெளிந்த பிறகு இரவு என்ன நடந்தது என்பது எதுவுமே கோபிக்கு ஞாபகமில்லை. பின்பு, வழக்கம்போல ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு மீண்டும் இந்த வீட்டிற்கு வருகிறார்கள் என ராதிகா கோபியை பயங்கரமாக திட்டி அனுப்புகிறார். இரவில் குடித்துவிட்டு வந்ததற்காக தான் ராதிகா திட்டுகிறாளா? என கோபி நினைத்துக் கொண்டிருக்கிறார். இதன்பிறகு ராதிகாவிடம் சண்டைபோட பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். உன்னை நம்பித்தானே எங்கள் வீட்டுக்குள் உன்னை அனுமதித்தோம் என கண்டபடி ராதிகாவை பாக்கியா திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!