கோபி & ராதிகாவின் உறவை பற்றி தெரிந்து பாக்கியா எடுத்த முடிவு – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபிக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்க பாக்கியாவும் ராதிகாவும் அவரை பார்க்க வருகின்றனர். அப்போது ராதிகாவை கோபியின் மனைவி என நர்ஸ் அழைக்க அது பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அடுத்து நடக்கும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பற்றிய உண்மை எல்லாம் வீட்டில் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதற்கிடையே ராதிகாவுக்கு கோபியை பிடிக்காமல் இருக்க அதனால் கோபி டென்ஷனாக கார் ஓட்டி வந்து அவருக்கு விபத்து ஏற்படுகிறது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மேலும், கோபி மயக்கத்தில் பாக்கியா நம்பரும் ராதிகா நம்பரும் மனைவி என சொல்லி வேறு வேறு நர்ஸ்கள் போன் செய்து இருவரையும் வர சொல்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
பின் இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வர ராதிகாவை மனைவி என நினைத்து நர்ஸ் பில் கட்ட சொல்கிறார். பாக்கியா வந்து பில் கட்ட வேண்டுமா என கேட்க கோபியின் மனைவி கட்டிவிட்டதாக சொல்கிறார் நர்ஸ். நான் தான் கோபியின் மனைவி என பாக்கியா சொல்ல நர்ஸ் அவருடைய மனைவி டாக்டரை பார்க்க சென்றிருப்பதாக நர்ஸ் சொல்கிறார். பாக்கியா யார் என தெரியாமல் தேடி அலைய, பின் நர்ஸ் கோபியின் மனைவி வாங்க என சொல்ல ராதிகா எழுந்து செல்கிறார்.
அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின் ராதிகா உள்ளே சென்று கோபியின் கையை பிடித்துக் கொண்டு பேச கோபி நீ இல்லாமல் நான் செத்துருவேன் என சொல்ல அதை எல்லாம் கேட்டு பாக்கியாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். இனிமேல் கோபி வேண்டாம் என பாக்கியா முடிவு செய்து கோபியிடம் இது பற்றி சொல்ல இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.