T20 World Cup : இந்திய அணிக்கு சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன் – எகிறும் எதிர்பார்ப்பு!

0
T20 World Cup : இந்திய அணிக்கு சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன் - எகிறும் எதிர்பார்ப்பு!
T20 World Cup : இந்திய அணிக்கு சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன் - எகிறும் எதிர்பார்ப்பு!
T20 World Cup : இந்திய அணிக்கு சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன் – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கும் T 20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகளில், இந்திய அணியை வீழ்த்தி எங்களது பயணத்தை துவங்குவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் சவால் விடுத்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகள்

கிரிக்கெட் விளையாட்டு உலகில் நடத்தப்படும் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்று உலகக்கோப்பை தொடர்கள் ஆகும். உலக நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடர்களில் இந்திய ரசிகர்களை கவனம் ஈர்ப்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான மோதல் தான். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு T 20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் ஐக்கிய அரபு எமீரகத்தில் (UAE) வைத்து நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செப். 5-ஆம் நாள் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் – முதல்வர் வாழ்த்து!

இதற்காக உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகின்றனர். இந்த உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணைகள் கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபி ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் வைத்து போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு அணி வீரர்களும் கலந்து கொள்ளும் இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 12 , குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இப்பிரிவில் பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த அணிகளும் கலந்து கொள்ள உள்ளன. மேலும் உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 24 ஆம் தேதி துவங்கும் இந்திய அணிக்கான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை நடைபெற்றுள்ள உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது இல்லை என்பது வரலாறாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வெற்றி கண்டு எங்களது போட்டிகளை துவங்குவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் கூறியுள்ளார்.

இனி இவர்களுக்கும் இலவச லேப்டாப் – தமிழக அரசு அதிரடி!

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘என்னை பொறுத்தவரை இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி வலிமைமிக்கதாக கருதுகிறேன். அதனால் உலகக்கோப்பை தொடரில் எங்களுடன் விளையாடும் இந்திய அணிக்கு தான் நெருக்கடி அதிகம். இந்தியாவை தோற்கடித்து எங்களது உலகக்கோப்பை பயணத்தை தொடங்குவோம். UAEல் வைத்து நடைபெறும் போட்டிகள் எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருக்கும். அந்த ஆடுகளங்களை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். ஆட்டத்தில் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து அம்சத்திலும் எங்களது 100% பங்களிப்பை அளிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!