ராதிகாவை நிற்க வைத்து கேள்வி கேட்கும் பாக்கியா? சீரியலில் அடுத்த அதிரடி திருப்பம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி செய்த தவறுக்காக அவரை கேள்வி கேட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறும் பாக்கியா, ராதிகாவை நேரில் சந்தித்து அவரிடமும் தன்னுடைய கோபத்தை கொட்டி தீர்ப்பது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் பரபரப்புக்கும், ஸ்வாரசியத்திற்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 550 எபிசோடுகளை கடந்து வெளியாகி வரும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் ரகசிய உறவு பற்றிய உண்மைகள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பாக்கியா மூலமாக தெரிய வருகிறது. இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அறிந்து கொள்ளும் குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். மறுபக்கத்தில், கோபியுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்புகிறார் பாக்கியா.
Exams Daily Mobile App Download
இப்போது, பாக்கியா வீட்டில் இருந்து கிளம்பி இருந்தாலும் அவர் எப்படியாவது திரும்பி வர வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்புகின்றனர். மறுபக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார். அதனால், பாக்கியா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. இப்போது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய எபிசோடில் தான் செய்தது தவறுதான். ஆனால் எனக்கு இருந்த நிறைவேறாத ஆசைகளால் தான், நான் இப்படி செய்து விட்டேன். நான் என்னுடைய ஆசைகளை பற்றி யோசித்திருக்க கூடாது.
இன்னும் இந்த குடும்பத்துக்காக மட்டும் தான் நான் யோசித்திருக்க வேண்டும் என மனம் நொந்து பேசுகிறார் கோபி. இருந்தாலும், பாக்கியாவை ஏமாற்றியது குறித்து ஒரு குற்ற உணர்வு கூட கோபிக்கு இருப்பது போல தெரியவில்லை. ஆனால், இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பாக்கியா சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில் ராதிகாவை நேரில் சந்திக்க அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு, நடந்த விவரம் எதுவும் அறியாத ராதிகா, பாக்கியாவை வழக்கம் போல வரவேற்கிறார். இப்போது, ராதிகாவும் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி பாக்கியா தனது கோபத்தை கொட்டித் தீர்ப்பது போல அடுத்த எபிசோடு வெளியாக இருக்கிறது.