கணவரை பிரிந்து வாழும் ‘பிக் பாஸ்’ பிரியங்கா? பயில்வான் ரங்கநாதன் கூறிய ஷாக் தகவல்!
விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளர் பிரியங்கா குறித்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பயில்வான் ரங்கநாதன் கூறிய ஷாக் தகவல்:
விஜய் டிவி சீரியல் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல்வேறு சீசன்களில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வருபவர் பிரியங்கா. பிரியங்கா விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும், அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பெரிய கூட்டமே உள்ளது. அவரது காமெடியான பேச்சு மற்றும் திறமையின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தமிழகம் 2வது இடம்!
மேலும் பிக் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்று, இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் ஆங்கர் பிரியங்கா குறித்து தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் செய்தியாளரும், நடிகரும் ஆனா பயில்வான் ரங்கநாதன் ஆங்கர் பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் பிரியங்கா அவரது கணவரை எதற்காக பிரிந்து உள்ளார் என்ற காரணத்தை கூறியது பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
விஜய் டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர் பிரவீன் குமார். மேலும், விஜய் டிவிக்கு பிரியங்காவை அவர் தான் அடையாளம் காட்டினார். அந்த நன்றி கடனுக்காக தான் பிரியங்கா அவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இருவரும் சில காலம் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், பிரியங்காவிற்கு அவரை விட பணமும் புகழும் அதிகரித்தது. இதனால் பிரியங்காவிற்கு அகந்தை ஏற்பட்டு விட்டு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இதனால் இருவரும் பல மாதங்களாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிரியங்கா அங்கும் கணவர் பற்றி எதுவும் பேசவில்லை என பயில்வான் ரங்கநாதன் தந்த பேட்டி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.