நாட்டின் பத்மபூஷன் விருது 2022…கூகுள் CEO சுந்தர் பிச்சை பெருமிதம்!!

0
நாட்டின் பத்மபூஷன் விருது 2022 கூகுள் CEO சுந்தர் பிச்சை பெருமிதம்
நாட்டின் பத்மபூஷன் விருது 2022 கூகுள் CEO சுந்தர் பிச்சை பெருமிதம்
நாட்டின் பத்மபூஷன் விருது 2022…கூகுள் CEO சுந்தர் பிச்சை பெருமிதம்!!

இந்திய நாட்டின் 3வது சிறந்த குடிமகனுக்கான விருதாக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதை கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவிற்கான இந்திய தூதரால் வழங்கப்பட்டுள்ளது.

பத்மபூஷன் விருது:

இந்திய நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது பட்டியல் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும், இதில் 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்த பட்டியலில் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அமெரிக்காவிற்கான இந்திய தூதரால் கூகுளின் CEO சுந்தர் பிச்சையிடம் பத்மபூஷன் விருது ஒப்படைக்கப்பட்டது.

வரும் டிச.5ம் தேதி தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த விருதானது சான் பிரான்சிஸ்கோவில் சுந்தர் பிச்சையின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற சுந்தர் பிச்சை கூறியதாவது, இன்று எனது குடும்ப உறுப்பினர்களுடன் இந்த விருதை பெறுவது மிகவும் கவுரமாக இருப்பதாகவும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!