தமிழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் நெல் விதைப்பு பணி – 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் நெல் விதைப்பு பணி - 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் நெல் விதைப்பு பணி - 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் நெல் விதைப்பு பணி – 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் உள்ள மேல பருத்திக்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் நேரடி நெல் விதைப்புக்கு எதிராக சில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் அசாதாரணமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

மயிலாடுதுறை மாவட்டம், மேல பருத்திக்குடி கிராமத்தில் கிட்டத்தட்ட 40 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. எப்போதும் விவசாய கூலி தொழிலாளிகளை வைத்து தான் நெல் விதைப்பு பணி நடைபெறும். ஆனால், தற்போது அந்த 40 ஏக்கர் விவசாய நிலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையின் மூலமாக விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த நேரடி நெல் விதைப்பு முறையின் மூலமாக நாற்று பறித்தல் மற்றும் நாற்று நடுதல் போன்ற பணிகள் இல்லாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

இதன் பின்னர் கடந்த ஜூன் 16-ஆம் தேதி விவசாயிகளுக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூலி தொழிலாளிகள் தங்களது தரப்பில் உள்ள நியாயங்களை விளக்கினர். ஆனாலும், விவசாயிகள் கூலித் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் கோபமடைந்த கூலித்தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நேரடி நெல் விதைப்பு பணிகளை தடுத்தனர்.

Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி & விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!

இந்த கலவரத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இவர்களை கைது செய்த பிறகு நேரடி நெல் விதைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. மேலும், நேரடி நெல் விதிப்பை எதிர்த்து சில கூலித் தொழிலாளிகள் காவல்துறையினருடன் அடிதடியில் ஈடுபட்டனர். இத்துடன், நேரடி நெல் விதைப்பை எதிர்த்து சாலைமறியல் செய்த சுமார் 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், மேல பருத்தி குடி பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வருவதால் இன்று மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!