நெல் குவிண்டால் ஆதார விலை ரூ.72 உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் நெல் குவிண்டாலுக்கான ஆதார விலையை ரூ.72 அதிகரித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தற்போது மத்திய விவசாய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு:
இந்தியாவில் தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்பரவலின் இரண்டாம் அலை முழுவதுமாக கட்டுக்குள் வராமல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மத்தியில் இன்று (ஜூன் 9) நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் கூறியதாவது, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலை தற்போது ரூ.72 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு குவிண்டால் நெல் ரூ.1868 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1940 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கம்பிற்கு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு குவிண்டால் கம்பு ரூ.2,150 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,250 ஆக அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் நாட்டில் ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 5ஜி இணையதள சேவை திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இணையதள சேவைக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.