ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
தனியார் நிறுவனமான ஒயோ வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் பணி நாளாக அறிவித்துள்ளது. மற்ற நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கியுள்ளது.
ஒயோ நிறுவனம்:
இந்த கொரோனா காலகட்டத்தில் ஊழியர்களின் உடல் நலம் மற்றும் மனநிலையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்து நிறுவனங்கள் பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து ஒயோ நிறுவனம் ஊழியர்களின் நலன் கருதி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இன்று முதல் ஒயோ நிறுவனத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இடைவெளி 12 முதல் 16 வாரங்கள் நீட்டிப்பு – மத்திய அரசு ஒப்புதல்!!
அந்நிறுவனம் புதன்கிழமை விடுமுறை அளித்து பிற நாட்களில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஊழியர்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், சம்பளத்தில் எவ்விதமான பிடித்தமும் செய்யப்பட மாட்டாது. மேலும் விடுப்பு நாட்களில் வேலை பற்றிய கவலை கொள்ளக் கூடாது என ஒயோ நிறுவனத்தின் தலைவரான ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த 4 நாள் வேலை வழக்கம் அடுத்த 4 வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும். ஜூன் மாதம் நிலைமையை ஆய்வு செய்து பிறகு தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும். சம்பளத்துடன் விடுமுறை ஜூலை மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும் என ரிதேஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளார். தாம் தன் வேலையை விரைவாக முடித்து விட்டு குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் பேச உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்