புதிய நிதியாண்டில் சுமார் 300 பேருக்கு வேலைவாய்ப்பு – OYO அறிவிப்பு!
பயண தொழில்நுட்ப நிறுவனமான OYO, தற்போது துவங்கியிருக்கும் 2021-22 புதிய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்குள், அதாவது இன்னும் ஆறு மாதத்திற்குள் சுமார் 300 பேரை பணியில் அமர்த்துவதாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் செயல்பட்டு வரும் OYO, ஒரு முன்னணி பயண தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த OYO நிறுவனத்தில் தற்போது 50 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மைக்ரோ சர்வீஸ்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர OYO, OYO OS, Co-OYO போன்ற நுகர்வோர் மற்றும் கூட்டாளர் பயன்பாடுகள், ஆன்லைன் பயண முகவர்களுக்கான மாறும் விலை பயன்பாடு, கட்டண மேலாளர் போன்ற பிற பயன்பாடுகளையும் இந்நிறுவனம் அளிக்கிறது.
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு – விரைவு தரிசன டிக்கெட் ஒத்திவைப்பு!
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின் கீழ் OYO நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் நுழைவு நிலை மற்றும் மூத்த தலைமைப் பணிகளுக்கான மென்பொருள் உருவாக்குநர்கள், பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!
இந்த புதிய பணியாளர்கள் இயந்திர கற்றல், தரவு பொறியியல் மற்றும் தகவல் பாதுகாப்பு, ஆண்ட்ராய்டு மற்றும் iOS மேம்பாடு ஆகிய துறைகளில் முக்கிய திறன் அமைப்புகளையும், நிபுணத்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. தவிர இந்நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுக்கள் ஓயோவின் நீண்டகால திறன்களை புதிதாக உருவாக்கி தற்போதைய தொழில்நுட்ப அடுக்கை புதுப்பிக்க வேண்டிய பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இது தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.