கொரோனாவால் உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்திற்கு 8 மாத சம்பளம் – பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த தங்களது ஊழியர்களின் குடும்பத்திற்கு இந்தியாவின் ஒயோ நிறுவனம் பல வித சலுகைகளை அறிவித்துள்ளது. 3 வருடத்திருக்கான சம்பளம் உட்பட குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று கொள்வது வரை பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் தற்போது கொரோனா 2ம் அலை வீசி வருகின்றது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பலர் பாதிப்படைந்து வந்தாலும், இந்த கொடூர நோய் தாக்கத்தினால் பலர் மரணம் அடைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் குடும்பத்திற்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது.
TNUSRB 969 சார்பு ஆய்வாளர் தேர்வு பட்டியல் ரத்து – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
அந்த வகையில் பிரபல ஒயோ நிறுவனம் கொரோனா காரணமாக மரணம் அடையும் தங்களது ஊழியர்களின் குடும்பத்திற்கு 8 மாத சம்பள பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த சம்பளத்திருக்கான 3 வருட டெர்ம் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் 5 வருட கல்வி செலவு நிறுவனத்தின் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் ஊழியர்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சலுகைகளை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.