தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் – உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்து உள்ளனர்.
தியேட்டர்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோய்த்தொற்று அதிக வேகத்தில் பரவி வந்ததால் அரசு தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தியது. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு அரசு தடை விதித்தது.
தமிழகத்தில் ஜூலை 12 முதல் கல்லூரிகள் திறப்பு – ஆராய்ச்சி மாணவர்களுக்கு அனுமதி!!
ஆனால் ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. இந்நிலையில், தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் நாளை நேரில் சென்று மனு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் திறக்க அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் திரை உலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கேளிக்கை வரி, உள்ளூர் வரி, சொத்து வரி ரத்து போன்ற கோரிக்கைகளை முன் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்துள்ளனர்.