தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம்? உரிமையாளர்கள் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பேருந்து பொது போக்குவரத்து இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று முதல் 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து 50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 1 உட்பட அரசு பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இல்லை – மாநில அரசு முடிவு!
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் காரணமாக பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
அதனால் எங்களது பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்களது பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டு வரி விலக்கு பெறும் வகையில், பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஏற்கெனவே போக்குவரத்துத் துறைக்கு தெரிவித்துள்ளோம். இதன்படி ஜூன் மாதம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் உள்ளது. எனவே, மொத்தமுள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனினும், திங்கள்கிழமை முதல் ஒரு சில பேருந்துகளும், ஜூலை மாதம் முதல் முழு வீச்சில் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.