தமிழகத்திற்கு நவ.23 வரை 2,600 கனஅடி காவிரி நீர் வழங்க உத்தரவு – மேலாண்மை ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்திற்கு வரும் நவ.23 ஆம் தேதி வரையிலும் 2,600 கனஅடி காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர்:
தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டும் கர்நாடகா அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதாவது, கர்நாடகா மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதாக கூறி கர்நாடகா அரசு காவிரி நீரை வழங்க மறுக்கிறது. மேலும், தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 20% தீபாவளி போனஸ் – கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமா அரசு?!
இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவது தொடர்பாக டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்திற்கு நவ.23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.