8ம் வகுப்பு வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு முடிவு!
டெல்லியில் முன்னதாக உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்களின் கற்றல் அடைவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் செயல்படவில்லை. மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் கோவிட் -19 இன் தீவிரமான இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் மீண்டும் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புக்கான நேரடி வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடம் – புதிய திட்டம்!
ஆனால் முன்னதாகவே 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் மாணவர் சேர்க்கை மற்றும் நடைமுறைத் தேர்வு தொடர்பான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் பள்ளிகள் 8 ஆம் வகுப்பு வரை மூடப்பட்டிருக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 16ம் தேதியான நாளை முதல் பொது கண்காட்சிகளுக்கு டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வணிகம் – நுகர்வோர் கண்காட்சிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.