தமிழகத்தில் 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு – கருமுட்டை விவகாரத்தில் அமைச்சர் அதிரடி உத்தரவு!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுமியின் உடலில் இருந்து சட்ட விரோதமாக பல முறை கருமுட்டை திருடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மருத்துவமனைகளை உடனடியாக மூட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கருமுட்டை விவகாரம்:
ஈரோடு மாவட்டத்தில் பணத்தின் மீதியுள்ள ஆசையால் சொந்த தாயாரே தனது கள்ள காதலனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியின் கருமுட்டையை சட்ட விரோதமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தையே பதற வைத்துள்ளது. மேலும், இந்த வழக்கில் ஈடுபட்ட பெண்ணின் தாயார், அவரின் கள்ளக்காதலன், இடைத்தரகராக செயல்பட்ட பெண் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டை பெற்று அதனை விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனால், சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, ஓசுர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனை, திருப்பதி கருத்தரிப்பு மையம் மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை ஆகிய 6 மருத்துவமனைகள் இந்த கருமுட்டை விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, ஓசுர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், 15 நாட்களுக்குள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனையை மூட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள 2 வெளி மாநிலங்களை சார்ந்த மருத்துவமனைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக 50 லட்சம் ரூபாய் அபராதமும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கருத்தரிப்பு மையங்களும் முறையாக செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.