தமிழகத்தில் ஊர்க்காவல் படை பணிக்கான அரசாணை ரத்து செய்யப்படுமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
தமிழகத்தில் உள்ள ஊர்க்காவல் படையினர் பணிக்காலம் 10 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கிற்கு நீதிபதிகள் தீர்ப்பளித்ததை பற்றி பார்ப்போம்.
ஊர்க்காவல் படை:
தமிழகத்தில் முதலில் ஊர்க்காவல் படையினரின் பணிக்காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டதால் ஊதிய உயர்வு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை தொடர்ந்து, ஊர்க்காவல் படையினர் மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலைக்கு அழைக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதன்பின்பு, ஊர்க்காவல் படையினரின் பணிக்காலம் மாதத்திற்கு 5 நாட்களுக்கு பதிலாக 10 நாட்கள் என அதிகரிக்கப்பட்டு புதிய அரசாணை கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் இந்த அரசாணையில் 8 மணி நேரத்துக்கு ரூ.560 என நிர்ணயிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இவர்களுக்கு பணி நாட்கள் குறைத்ததால் ரூ.2800 அல்லது ரூ.5600 மட்டுமே சம்பளமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு வியாபாரத்தை நீடிக்கும் Flipkart Health+ – CEO தகவல்!
Exams Daily Mobile App Download
அதனால் இந்த பணி நாட்களை குறைத்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, ஊர்காவல் படை என்பது அரசு பணி இல்லை என்றும் சொந்த விருப்பத்தின் பெயரில் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் பணி நாட்களை குறைத்த அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.