தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம் மார்ச் 4ம் தேதி அன்று வருவதால் நெல்லை மாவட்டத்திற்கு அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்களுக்கு மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்கும். அப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை விடுமுறை அளிக்கப்படும்.

TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTR பதிவுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தற்போது வரும் மார்ச் 4ம் தேதி ( வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம் சிறப்பிக்கப்பட உள்ளது. இதனை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த மக்களும் மிகவும் விமரிசையாக சிறப்பிப்பார்கள். இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி இருக்கும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மத்திய அரசு ஊழியர்கள் வங்கிக்கணக்கில் ரூ.10000 – பண்டிகை கால சிறப்பு முன்பணம்! அரசு திட்டம்?

மேலும், அறிக்கையில் இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என்றும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 12ம் தேதியான சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!