நாளைய வரலாறு சொல்லும் தமிழக அரசின் ஆணை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்!

0
நாளைய வரலாறு சொல்லும் தமிழக அரசின் ஆணை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்!
நாளைய வரலாறு சொல்லும் தமிழக அரசின் ஆணை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்!
நாளைய வரலாறு சொல்லும் தமிழக அரசின் ஆணை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்!

தமிழக அரசின் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச கல்வி அறிவிப்பின் ஆணை வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசின் திட்டத்தை பற்றி புகழ்ந்த்துள்ளார்.

அரசின் ஆணை:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பொறியியல் படிப்புகளில் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என்ற மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 7.5 % உள்இடஒதுக்கீடு மூலம் சேர்க்கப்படுவார்கள் என்று அரசு ஆணையினை முன்னதாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில், 7.5% இடஒதுக்கீட்டில் இடம்பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என பொறியியல் மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் செப்டம்பர் 20ம், தேதி அறிவித்துள்ளார்.

செப்.24 ல் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் சந்திப்பு – முக்கிய ஆலோசனைகள்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது. இந்தநிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் 7.5 சதவீதம் என்ற சமூக நீதியை வழங்கி அதற்கான சேர்க்கை ஆணையையும் வழங்கி உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தமிழக அரசின் இந்த ஆணையை நாளைய வரலாறு சொல்லும். தமிழக அரசின் இந்த ஆணையினால் நடப்பு ஆண்டில் மட்டும் 9,000 ல் இருந்து 10,000 மாணவர்கள் பலனடைய உள்ளனர். மேலும்,உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அவர்கள், பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 15,600 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 7.5 சதவீதம் என்பது ஒவ்வொரு பிரிவிலும் உண்டு. அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 1 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது 7.5 சதவீதம் என்று ஆக உள்ளது என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!