‘பட்டிமன்ற புகழ்’ பாரதி பாஸ்கருக்கு மூளையில் அறுவை சிகிக்சை!
தமிழகத்தில் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கர் அவர்களுக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாரதி பாஸ்கர்:
தமிழகத்தில் அக்காலத்திலிருந்தே பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு தனி வரவேற்பு உண்டு. தன் சொல் வன்மையால் நம்மை சிந்திக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள். வரலாற்று நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நிகழ்ந்துள்ள மாற்றங்களை எடுத்துரைப்பவர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள். அப்படிப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். 52 வயதான இவர் பல்வேறு மேடைகளில் தனது பேச்சால் கேட்போரை வியக்க வைத்தவர். இவர் அதிகமாக சன் தொலைக்காட்சியில் சாலமன் பாப்பையா நடுவராக தலைமை வகிக்கும் பட்டிமன்றத்தில் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் TET சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும் என அறிவிக்க கோரிக்கை!
பட்டிமன்றங்களில் இவரது பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் பிரபல தனியார் வங்கி ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு இவரின் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மூளை நரம்பு செல்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். பாரதி பாஸ்கர் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.