தமிழகத்திற்கு Orange Alert: 8ம் தேதி அதீத கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கியது. அத்துடன் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. ஆனால் வெகுவாகவே மழையின் அளவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்தது. இதையடுத்து தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்திற்கு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலைக்குள் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு- தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் தமிழகத்திற்கு நாளை முதல் கனமழை பெய்ய தொடங்கும் எனவும் இனி வரும் நாட்களில் படிப்படியாக கனமழை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு 8ம் தேதி அன்று அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்படுவதாகவும் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.