தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – நவ.11,12ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும்!

0
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - நவ.11,12ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும்!
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - நவ.11,12ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும்!
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – நவ.11,12ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும்!

வங்ககடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நவ.12ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்:

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழையும் கடந்த வாரம் முதல் கொட்டித் தீர்க்க தொடங்கி விட்டது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நவ.10 மற்றும் 11ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெய்த மழையினால் சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட சாலைகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 12-ம் தேதிக்குள் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகம் – உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

Follow our Instagram for more Latest Updates

அதனால் வரும் 11, 12ம் தேதிகளில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!