ஜூலை 10 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே அதி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ளது.
கனமழை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாகவே மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பையில் உள்ள சாலைகள் முழுக்க மழைநீர் தேங்கி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. மேலும், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், கூடுதல் மழைபொழிவின் காரணமாக ரயில் மற்றும் பேருந்துகளின் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே மும்பையில் 107 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், மும்பையில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் கனமழையின் காரணமாக 172 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இத்துடன், மஹாராஷ்டிராவில் கூடுதல் அதி கனமழையினால் ஆறுகளில் தண்ணீ்ரின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் நாளை வரைக்கும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காவலர்கள் தேர்வு முறையில் மாற்றம் – முழு விவரம் இதோ!
ஏற்கனவே, மகாராஷ்டிராவில் பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு இன்று வரை சிவப்பு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் போன்ற பகுதிகளுக்கு நாளை வரைக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விதித்துள்ளது. இதனையடுத்து, தானே மற்றும் மும்பைக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.