மாநிலத்தில் பல மாவட்டங்களில் ‘ஆரஞ்சு’ அலர்ட் அறிவிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பல மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்:
நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கணிசமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முதல் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் டேராடூன், நைனிடால், தெஹ்ரி, பவுரி, சம்பவத், சாமோலி, பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கனமழை காரணமாக பத்ரிநாத் NH-7 இன் ஒரு பகுதி, லம்பகாட்டில் அமைந்துள்ள கச்டா வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வெள்ளத்தால் நெடுஞ்சாலையின் இருபுறமும் பக்தர்கள் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4-5 நாட்களுக்கு மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – விரைவில் புதிய சட்டம்
மேலும் இந்த மாதம் பெய்த மழை காரணமாக பத்ரிநாத் கேதார்நாத் நெடுஞ்சாலையில் வெள்ள நீர் மற்றும் குப்பைகள் குவிந்ததால் சார் தாம் யாத்திரை பாதிக்கப்பட்டது. அதனால் பக்தர்கள் செல்லும் பாதையை மாற்றுப்பாதையில் மாவட்ட நிர்வாகம் மாற்றி இருக்கிறது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை இரண்டு முதல் மூன்று நாட்களாக தொடர்ந்து குப்பைகள் விழுந்து கிடப்பதால் சிரோப்கரில் சாலை அடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎம்டியின் எச்சரிக்கை அறிவிப்பின் படி மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.