அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
மும்பையில் நேற்று (ஜூன் 30) முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஜூலை 2ம் தேதியன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. அந்த வகையில் நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால், ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அப்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மும்பையில் நேற்று (ஜூன் 30) முதல் கனமழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து வரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அவ்வப்போது தீவிரமான காற்றழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் IMD மும்பை கணித்துள்ளது. இது குறித்த உத்தியோகப்பூர்வ தரவுகளின்படி, மும்பையில் இதுவரை 119.09 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 78.69 மிமீ மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 58.40 மிமீ மழையும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பெய்துள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளி நேரங்களில் மாற்றம்!
இந்த இடைவிடாத மழைக்கு மத்தியில், கல்பாதேவி மற்றும் சியோன் பகுதிகளில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்த கோர சம்பவங்களும் மும்பையில் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நகரத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரும்மும்பை பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில் சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக 12 பேருந்துகள் வேறு வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.