கனமழையை தொடர்ந்து கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – எச்சரிக்கை அறிவிப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தொடர் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
கேரளாவில் கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் பருவமழை முன்கூட்டியே
தொடங்கி விட்டது. மேலும் மழை பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மத்திய மற்றும் வடக்கு கேரள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பெய்து வரும் மழை மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விட்டது. இது தவிர பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் மீட்பு பணிக்காக 9 பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கேரள மாநிலத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாநிலம் முழுவதும் சுமார் 221 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 7000 க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
WhatsApp மூலம் Uber டாக்ஸி முன்பதிவு? எளிய வழிமுறைகள் இதோ
கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இடுக்கி அணை, பெரிங்கல்குத்து அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிக மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.