கனமழை காரணமாக ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
கனமழை காரணமாக 'ஆரஞ்சு' அலெர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கனமழை காரணமாக 'ஆரஞ்சு' அலெர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கனமழை காரணமாக ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்த அளவில் அதன் கிழக்கு பகுதிகள் கனமழையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை:

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து வார இறுதியில் ராஜஸ்தான் அருகே சூறாவளி சுழற்சி உருவாகத் தொடங்கியது, இதனால் அடுத்த சில நாட்களில் இரு மாநிலங்களிலும் ஒரே மாதிரியான அளவு தீவிர மழை பெய்தது. தற்போது, தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் தென்கிழக்கு மத்திய பிரதேசத்திற்கு அருகே உருவாகி உள்ள இரண்டு சூறாவளி சுழற்சிகள் காரணமாக மேற்கு மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இன்று( ஜூலை 26) வரை குஜராத் மற்றும் ராஜஸ்தானில் மின்னல் நிறைந்த இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும். மேலும், குஜராத் மற்றும் ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 29) வரை கனமழை தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கையாக, குஜராத் மாநிலத்தில் இன்று, கட்ச், வல்சாத் மற்றும் படான் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று உதய்பூர், சவாய் மாதோபூர் மற்றும் பரன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் நாளை (ஜூலை 27) பிகானேர், உதய்பூர், துங்கர்பூர் மற்றும் ஜலாவர் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள 207 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் ஏற்கனவே பாதி கொள்ளளவை எட்டியுள்ளது, அவற்றில் கால் பகுதி தற்போது நிரம்பி வழிகிறது. மேலும் மாநிலத்தின் போக்குவரத்துத் துறையும் நிலச்சரிவு மற்றும் நீர்நிலைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், தெற்கு குஜராத்தில் ஒரு வழித்தடத்தில் சுமார் 5,000 லாரிகள் நிறுத்தப்பட்டன. இதனால் பல தொழில்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!