தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விருப்ப தேர்வு – அரசுக்கு கோரிக்கை!
CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விருப்ப தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு CBSE வாரிய தேர்வுகள் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது.
தமிழக அரசின் ரூ.1000 பஸ்பாஸ் ஜூன் 26 வரை பெறலாம் – போக்குவரத்து கழகம்!
அதன்படி, 12 ஆம் வகுப்பில் இதுவரை நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் 40 சதவீதம் மதிப்பெண், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் நடந்த தேர்வுகளில் இருந்து 30 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் திருப்தியாக இல்லை என்றால் மாணவர்கள் விருப்ப தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் கூறுகையில், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எதிர்காலத்திற்கு மிகவும் தேவையானது. கடந்த காலங்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பலர், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால் கடந்த தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்காமல் சிபிஎஸ்இ போல தமிழகத்திலும் விருப்ப தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.
12th revision mark podunga plz ,,yidhuku mela exam ezhudhi college join panna time yirukadhu