நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி – குளிர்க்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!
இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர்:
இந்தியாவில் ஆண்டு தோறும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் முன்னிலையில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்காலக் கூட்டத்தொடர் இடையில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் கொரோனா இரண்டாம் பரவல் வேகமெடுத்த காரணத்தால் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை.
‘பாக்கியா வீட்டிற்கு வரும் மயூரி, பயந்து நடுங்கும் கோபி’ – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
தற்போது கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் குறைந்தது வருவதால் ஊரடங்கில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது அதனால் இந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தேதி முதல் நடைபெறும் என ஜூலை 14 ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பிரதமர் மோடி புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை மக்களவையில் அறிமுகம் செய்து கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர்.
TN Job “FB Group” Join Now
இதனால் அரங்கில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, பிற்பகல் 12.24 மணி வரை அவையை ஒத்திவைக்க மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இதில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.