மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – காதலில் விழுந்த இனியா! ரசிகர்கள் விமர்சனம்!
பாக்கியலட்சுமி சீரியலில் வரிசையாக பல சர்ச்சையான விஷயங்கள் நடந்து வரும், நிலையில் தற்போது இனியாவை வைத்து மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப தலைவி பாக்கியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கதையம்சம் அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒத்துழைப்பு எதுவும் இல்லாமல் தனது கனவையும், ஆசையையும் நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமாக போராடி வருகிறார். தனக்கு பிடித்த சமையலையே ஒரு தொழிலாக தொடங்கி தற்போது அதில் பெரிய அளவில் சாதித்தும் வருகிறார்.
விஷ பாம்பு தாக்கிய வாவா சுரேஷின் நிலை – 65 விஷமுறிவு மருந்து பாட்டில்கள்!
கேட்டரிங் தொழிலுக்காக தனியாக ஒரு வீட்டை பிடித்து பெரிய அளவில் தற்போது தொழிலை தொடங்கியுள்ளார். இந்த விஷயத்தில் பாக்கியாவின் கணவர் கோபிக்கு எந்த ஓப்புதலும் இல்லை. இதை சமாளித்து மீண்டு வரும் போது இனியாவின் பள்ளி தோழி குறித்த காட்சிகள் சீரியலில் வந்தது. கோபியின் செயல்கள் காரணமாகவும், இனியாவின் பள்ளி குறித்த காட்சிகள் வந்த போதும் சீரியல் மிகவும் எதிர்ப்பான கருத்துக்களை பெற்று வந்தது.
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தற்போது, ராமமூர்த்திக்கு பிசியோதெரபி கொடுக்க வீட்டிற்கு வரும் மருத்துவராக ரஜினிகாந்த என்ற கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனியா அவரை பார்த்த முதல் நாளில் இருந்து காதலிப்பது போல் காட்சிகள் வருகிறது. பள்ளி மாணவி ஒருவரின் செயல்களை குறித்த காட்சிகளில் காதல் தேவையா என்று ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.