TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்நிலையில் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
TNTET தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், தகுதித் தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்நிலையில் ஆசிரியர்தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் இன்று (ஜூலை 26) முதல் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் இன்று முதல் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் மேலும் மாற்றம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வு அட்டவணைகள் மற்றும் ஹால்டிக்கெட் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.