ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் ..இனி நல்ல காலம் பொறக்குது.. மத்திய அமைச்சர் தகவல்!
கடந்த ஆண்டு முதல் நாட்டின் ஐடி துறையானது மிகுந்த பாதிப்புகள் நிறைந்த சூழலில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில், இனி ஐடி துறைக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிக வாய்ப்புகள்:
இந்தியாவில் உள்ள அனைத்து துறை சார்ந்த உற்பத்தியை பெருக்கி, அந்நிய நாடுகளை இறக்குமதிக்காக சார்ந்து இருக்க வேண்டிய நிலையினை மாற்றி அமைக்க மத்திய அரசு பிஎல்ஐ திட்டத்தை கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த இலக்கினை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. அதன் பலனாக, ஜவுளித் துறை, ட்ரோன், ஒயிட் கூட்ஸ், உணவு உற்பத்தி, பார்மா துறை , தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்கள் ஆகிய துறைகளில் நல்லவளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
Whatsapp பயனர்களுக்கான புதிய அம்சம் – இனி மெசேஜ் Delete ஆகாது… எப்படி? விவரம் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
உலகம் முழுவதிலுமே ஐடி துறை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் தேவைகள் அதிகரித்து வருவதால், உற்பத்தியினை பெருக்க வேண்டிய நிலைமை உள்ளது. தற்போது இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பிஎல்ஐ திட்டத்தின் மூலம் ஐடி துறையினருக்கான உற்பத்தி அதிகரிக்கப்பட்டால், இத்துறை இந்தியாவில் நல்ல வளர்ச்சியை சந்திக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் துவண்டு கிடந்த ஐடி துறை மீண்டும் புத்துயிர் பெற்று முன்னேற்ற பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.