ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தற்போது வேகமெடுக்கும் கொரோனா மற்றும் குரங்கு அம்மையை கருத்தில் கொண்டு அரசானது கூடுதலாக 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதன் படி, தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயிலை இயக்கவுள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில் :
மலையாள மொழி பேசும் கேரளா மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். இந்த பண்டிகையை தொடர்ந்து 10 நாட்கள் பெரும் விமர்சையாக கொண்டாடுவார்கள். ஆனால் கடந்த 2020-2021 ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்றால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி எப்போதும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். ஆனால் வைரஸ் தாக்கம் தற்போது ஓரளவு குறைந்து, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சிறப்பாக பெரிய அளவில் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இப்படி இருக்கையில் அம்மாநில அரசுக்கு புதிதாக பரவி வரும் குரங்கு அம்மை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பிரச்சனை உள்ளிட்டவைகளை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும் முடிந்த வரையில் ஓணம் பண்டிகையை சிறப்பாக எவ்வித பாதிப்பும் இன்றி மக்கள் கொண்டாட வேண்டும் என அம்மாநில அரசு சில அம்சங்கங்களை செய்து வருகிறது. அதாவது 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை இந்த மாதம் ஆகஸ்ட் 30 முதல் செப் 8 வரை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அந்நாட்களில் நாடு முழுவதும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சென்றுள்ள மலையாளிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வி ஆணையர் முக்கிய உத்தரவு
அதேநேரத்தில் அந்த சிறந்த நாட்களில் நடைபெறவிருக்கும் விழாக்கள் மற்றும் போட்டிகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். அதனை தவிர்க்க தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கோவை, குமரி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து மாநில அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும். மேலும், சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு 8 ஜோடி சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2 – தாம்பரத்தில் இருந்து எழும்பூர், பெரம்பூர், காட்பாடி, சேலம், கோவை, பாலக்காடு, திரூர் வழியாக மங்களூருக்கு செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் மங்களூருவில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும்.
செப்டம்பர் 4 – தாம்பரத்தில் இருந்து எழும்பூர், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை, எர்னாகுளம், கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு செல்லும். மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
செப்டம்பர் 11 – நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலுவா, கோவை, சேலம், காட்பாடி வழியாக எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
செப்டம்பர் 12 – சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.