தமிழகத்தில் போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் மக்கள் தொகைக்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் மக்கள் தொகைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

கூடுதல் பேருந்துகள்

தமிழகத்தில் பொது போக்குவரத்தில் ஒன்றான பேருந்து போக்குவரத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம் செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரம், வேலூர், சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால் முக்கிய வழித்தடங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடமிருந்து கேட்ட போது, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கல்பாக்கம், மதுராந்தகம், ஓரிக்கை, செங்கல்பட்டு உள்பட பணிமனைகளில் பேருந்துகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஓட்டுநர், நடத்துநர் விடுப்பு எடுத்தாலும் மாற்று ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

Exams Daily Mobile App Download

மேலும் காஞ்சிபுரம் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள் அத்துடன் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. அதன் காரணமாக ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதால் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அரசு இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் விரைவில் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!