தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!
தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் பலவற்றை பற்றியும் ஆசிரியா் சங்கப் பிரதிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு ஆரம்ப நிலை வகுப்புகளான 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகமாக இருந்த சூழலில் பள்ளிகள் திறப்பை பற்றி அரசு முடிவெடுக்காமல் இருந்தது. ஆனால் தொற்று பாதிப்புகள் குறைந்து சற்று இயல்பு நிலை திரும்பியுள்ள பிறகு தான் பல்வேறு தரப்புகளில் இருந்தும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பிறகு, அரசு பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
இந்நிலையில், அக்டோபர் 21ம் தேதியான நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதை பற்றியும், மற்ற விஷயங்களை பற்றியும் ஆலோசனை நடத்தினார்கள். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவொளி ஆகியோா் மாணவா்களின் வருகையின் போது ஆசிரியா்களின் செயல்பாடு குறித்தும், தற்போது தொடங்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பாகவும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தீபாவளிக்கு பாதி போனஸ் தான்!
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், பட்டதாரிகள் மற்றும் தன்னாா்வலா்களை கொண்டு 6, 7, 8 வகுப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும். தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.4,000 சம்பளம் வழங்க வேண்டும் என்றும், திட்டத்தில் கற்பிக்கும் பணிக்கு இடைநிலை பயிற்சி பெற்ற ஆசிரியா்களை மாலை நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் சேகா் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.