தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை அறிக்கை தாக்கல்!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை அறிக்கை தாக்கல்!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதல்வர் முக ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. ஜூன் மாதம் திறக்கப்படவேண்டிய பள்ளிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திறப்பட்டது. அதுவும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு வகுப்பிற்கு 20 பேர் வீதம் மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – மனநல ஆலோசனை!

இப்படியான சூழலில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நிருபர்களுக்கு இது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மாணவர்கள் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே போல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதன் பிறகு, நாளை முதல்வர் முக ஸ்டாலினிடம் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆக ஆர்.என். ரவி – செப்.18ம் தேதி பதவியேற்பு!

நீட் தேர்வினை ரத்து செய்ய முதல்வர் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பிற்கு 20 பேர் மட்டுமே அமர வைக்கப்படுவதால், 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் மீதியுள்ள வகுப்பறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி அதனை முறைப்படுத்த முடியவில்லை என்றால் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படலாம்’ இவ்வாறாக அவர் பேசியுள்ளார். இதனால் நாளை பள்ளிகள் திறப்பு பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!