செப்.1 இரண்டு ஷிப்டுகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

0
செப்.1 இரண்டு ஷிப்டுகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு!
செப்.1 இரண்டு ஷிப்டுகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு!
செப்.1 இரண்டு ஷிப்டுகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாநில கல்வித்துறை பள்ளிகளுக்கான நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்புகள் ஜூலை மாதம் முதல் குறைந்து வருவதால் மால்கள், சந்தைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதனால் அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. மாநிலத்தின் மீண்டும் பள்ளிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் அரசை குறிக்கும் ‘G’ எழுத்து – காவல்துறை எச்சரிக்கை!

அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் கல்வித்துறை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான முதல் மாணவர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 வரை முதல் ஷிபிட் ஆகவும், அதே வகுப்பின் இரண்டாவது செட் மாணவர்கள் மதியம் 12.30 முதல் 5.30 வரை வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், முதல் ஷிபிட் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2ம் ஷிபிட் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையும் பள்ளிக்கு வர வேண்டும். இடையில் அரை மணிநேர உணவு இடைவேளை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முழுமையாக காற்றோட்டமான வகுப்பறைகளில் வகுப்பு நடத்த கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது. பள்ளிகளில் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை.

TN Job “FB  Group” Join Now

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. ராஜஸ்தான், இடைநிலைக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் சவுரப் சுவாமி, தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அரசு அளித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!