1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? மாநில அரசு ஆலோசனை!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்துகொண்டிருக்க கூடிய சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல், கொரோனா பரிசோதனை நேர்மறை விகிதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் படி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் – அரசுக்கு கோரிக்கை!
இந்நிலையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நிலையை ஆய்வு செய்த பின்னர், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை என்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6 வரை நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் – கால அவகாசம் நீட்டிப்பு!
மேலும் ஆன்லைன் வகுப்புகளின் போது தகவல் பரிமாற்றம் மற்றும் இணைய பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருவதால், நேரடி வகுப்புகளில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.