தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பள்ளி திறப்பு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன்படி கடந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அத்துடன் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் தேர்வுக்குரிய பாடத்திட்டங்களை முடிப்பதற்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு மிகவும் சுமையாக இருந்தது.

Exams Daily Mobile App Download

அதனால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்றும் பள்ளிகள் தொடங்க உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி திறப்பதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு நோரோ வைரஸ் தொற்று உறுதி – அச்சத்தில் பொதுமக்கள்!

மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு கூறியதாவது, பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் கட்டிட உறுதி தன்மை, மின்சாதனங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பராமரிப்பு பணிகளை செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பின்பு அனைத்து பள்ளிகளுக்கும் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!