தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? தலைமை செயலர் முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் முதல்வர் செயலர்கள் மற்றும் கல்வித்துறை செயலர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது 2020-21 புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட 6 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பிரபல நிறுவன ஊழியர்கள் 200 பேர் பணிநீக்கம் – கொரோனா பரவல் எதிரொலி!
இந்த கூட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் முதல்வர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக இந்த கூட்டம் தலைமை செயலர் இறையன்பு அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரின் தனி செயலர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார்.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2.5 சதவிகித உள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதி முடிவு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.