மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் திறப்பு; ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – பீஹார் முதல்வர் உத்தரவு!
பீஹார் மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் இன்று மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் மாநிலத்தில் உள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் நீக்கம்:
பீஹார் மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மெல்ல குறைந்து வந்தது. இதனால் மாநில முதல்வர் மாநிலத்தின் கொரோனா தொற்று பற்றிய பகுப்பாய்வை நடத்தினார். அதன்படி, மாநிலத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை 6ம் கட்டமாக நீக்கியுள்ளார். இதற்கு முன்னதாக பீஹார் மாநிலத்தில் முதல் கட்டமாக ஜூலை 8 முதல் 15 வரை தளர்வுகள் அளிக்கப்பட்டது. 2, 3, 4 மற்றும் 5ம் கட்டங்கள் முறையே ஜூன் 16 முதல் 22 வரையும், ஜூன் 23 முதல் ஜூலை 26 வரையும், ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 6 வரையும், ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரையும் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ – ஜீ தமிழில் ‘சர்வைவர்’ செப்.12 முதல் ஒளிபரப்பு!
தற்போதைய தொற்று நிலவர பகுப்பாய்வின் படி, இன்று நடைபெற்ற நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் நிதிஷ்குமார் 6ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளார். இதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், மாநிலத்தின் மக்கள் அனைவரும் மூன்றாவது அலையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வழிகாட்டுதல்கள்:
- கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து சூழ்நிலையில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்கள் சாதாரணமாக திறக்கப்படும்.
- மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், அனைத்து வகையான சமூக, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளையும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடு செய்யலாம்.
- அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்,1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் சாதாரணமாக திறக்கப்படும். தேர்வுகளை மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சினிமா அரங்குகள், கிளப்புகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள் மற்றும் உணவு கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.