மருத்துவ, பொறியியல் மற்றும் பிற கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் குறைந்து வருவதை தொடர்ந்து கல்லூரிகளை மீண்டும் திறக்க எடியூரப்பா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. எனினும் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக கர்நாடகா மாநிலத்தில், கடந்த மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நோய் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருவதால், தொழில்முறை மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளை ஒரு கட்டமாக திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
50 வயதில் 10 கோடி ரூபாய் இருப்பு – SIP சிறந்த முதலீடு திட்டங்கள்!
அதாவது மாநிலம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்கும், அவற்றை நிர்வகிப்பதற்குமான உயர்மட்டக்குழுவின் இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொண்ட அவர், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள அளவுகளை கணக்கில் கொண்டு கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் முதலாவதாக மருத்துவம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்பு கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி அளவின் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதை உறுதி செய்வதற்காக வரும் நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்ஸிஜன் சப்ளை செய்வதை தவிர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு என சிறப்பு படுக்கைகளை தயார் செய்வது மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைப்பது உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.