திருமணம் குறித்து மனம் திறந்த செம்பருத்தி சீரியல் ஷபானா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஷபானா, சமீபத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது காதல் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.
நடிகை ஷபானா:
சின்னத்திரையில் புதுமுக நடிகையாக ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஷபானா. TRPயில் போட்டியில் போட்டி போட்ட சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த ஷாபனாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் கதாநாயகன் மாற்றத்திற்கு பின் TRPயில் சரிவு ஏற்பட்டது, இந்நிலையில் ஷபானாவும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
Exams Daily Mobile App Download
ஷாபனாவும் ஆர்யனும் வேறு மதம் என்பதால் அவர்களது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் சில மாதங்களுக்கு முன் ஷபானா ஆர்யன் நண்பர்கள் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஷபானா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவருடைய அம்மா ஹிந்து பையனை திருமணம் செய்ய கூடாது என பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தாராம். அந்த எதிர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டாராம்.
மேலும் அவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அவருடைய கண் தான் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் காதல் விவகாரம் தெரிந்து அவரது குடும்பத்தில் யாருமே 3 ஆண்டுகளாக பேசவில்லை என மனம் உருகி பேசி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது, மேலும் காதலுக்காக இவ்வளவு செய்ததை நினைத்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.