முழு ஊரடங்கில் பெண்களுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதி – அரசு அதிரடி உத்தரவு!
கார்கோனில் ராமநவமி தினத்தின் போது நடந்த கலவரத்தால் பக்தர்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் செய்தனர். இதனால் அங்குள்ள பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கின் போது பெண்கள் மட்டும் வெளியே செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் பெண்களுக்கு அனுமதி:
மத்தியப் பிரதேசம் கார்கோனில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராமநவமி என்பதால் ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது அந்த பக்தர்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 30 ற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட பலரும் பல்வேறு வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தினர். மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேறி சென்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த கலவரத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் கலைத்தனர். இதனால், கார்கோன் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 10 க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்று தான் தீர்வு என நினைத்து மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் ஊரடங்கை பிறப்பித்தார்.
அதாவது , மத்திய பிரதேசம் கார்கோனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 121 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களில் 89 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். நான்கு நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்த பிறகு நேற்று காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க பெண்களுக்கு மட்டும் தனியாக இரண்டு மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.