தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் உள்நுழைய அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அருணாச்சலப் பிரதேசம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு ஆண்டிற்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் – அடல் திட்டத்தின் சிறப்பம்சங்கள்!
அதன்படி, மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அருணாச்சலப் பிரதேச தலைமை செயலாளர் நரேஷ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் தடுப்பூசி போடும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 68 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இன்னும் கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 100 சதவிகிதம் விரைவில் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மணிப்பூர், மேகாலயாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.