மாநிலத்தில் இனி இரு பாலர் பள்ளிகள் மட்டுமே செயல்படும்? அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவ மாணவிகளிடையே ஆண்,பெண் சமத்துவத்தை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாநில குழந்தைகள் நல ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேரள அரசு:
நாட்டில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அவ்வாறு உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைப்பது அவசியமாகும். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் பாலினத்தை பற்றி எளிதில் புரிந்து கொண்டு செயல்பட உதவியாக இருக்கும். அந்த வகையில் கேரள அரசு பள்ளிகள் அனைத்தையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமத்துவ சீருடை என்ற திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – இதை செய்தால் மட்டுமே ரூ.2000!
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது மக்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பள்ளிகள் இருபதால் மாணவர்களிடையே பாலின சமத்துவம் புறக்கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக கேரளத்தில் ஆண் பள்ளிகள், பெண் பள்ளிகள் என்பதை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு அடுத்த கல்வி ஆண்டு முதல் இருபாலர் பள்ளிகள் என்று தான் செயல்பட வேண்டும் என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக பள்ளிகளில் இருபாலரும் பயன்படுத்தும் விதமாக கழிவறைகளை அமைத்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்த பிறகு 11 பள்ளிகள் இருபாலர் பள்ளிகளாக மாற்றப் பட்டுள்ளன. கேரளாவில் தற்போது 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் என மொத்தம் 444 தனி பாலர் பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளிகளை தான் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன் குட்டி இந்த திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்துக்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வருமேயானால் அதனை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இருப்பினும் கேரள குழந்தைகள் நல ஆணையம் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.